வியாழன், 11 ஜனவரி, 2018

400 ஊழியர்கள் பணிநீக்கம்: ஏர் இந்தியா அதிரடி!

400 ஊழியர்கள் பணிநீக்கம்: ஏர் இந்தியா அதிரடி!

ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்ட 400க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஏர் இந்தியா நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் ஆகஸ்ட் மாதம் ஏற்கெனவே இருந்த ஒப்பந்தத் தொழிலாளர்களை நீக்கிவிட்டு, ஓய்வுபெற்ற ஊழியர்களைப் பணியமர்த்த ஒப்பந்தங்களைப் போட்டது. இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட 400க்கும் மேற்பட்ட ஊழியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவரும் தொழில்நுட்பப் பிரிவைச் சாராதவர்கள் என ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான பிரதீப் சிங் கரோலா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மத்திய அமைச்சகம் ஏர் இந்தியா நிறுவனத்தில் உள்ள அரசின் பங்குகளை விற்க அனுமதியளித்தது. இதையடுத்து கடந்த ஜனவரி 5ஆம் தேதி ஏர் இந்தியா நிர்வாக இயக்குநரகம், தொழில்நுட்பப் பிரிவு இல்லாத மற்றும் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஒப்பந்த ஊழியர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்தது. இந்தப் பணிநீக்கத்தில் ஏர் இந்தியாவின் துணை நிறுவனங்களான ஏர் இந்தியா, ஏர் திராஸ்போர்ட் சேவைகள், ஏர் இந்தியா சார்ட்டர்ஸ் லிமிடெட், ஏர்லைன் அலைடு சேவைகள் மற்றும் ஏர் இந்தியா என்ஜினீயரிங் லிமிடெட் ஆகிய நிறுவனங்களும் அடங்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

hasdddgs

 ndnndvnvn